சப்ரகமுவ பல்கலைகழக மாணவன் விவகாரம் தொடர்பில் 10 மாணவர்களுக்கு விளக்கமறியல்..!
சப்ரகமுவ பல்கலைகழகத்தில் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 10 மாணவர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பலாங்கொடை தலைமை நீதவான் பாக்யா தில்ருக்ஷி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி, சரித் தில்ஷான் என்ற பல்கலைக்கழக மாணவர் பல்கலைக்கழகத்திற்குள் நடந்த பகிடிவதைக் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
Tags:
இலங்கை செய்தி