மின்னல் தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
வளிமண்டலவியல் திணைக்களம் சபரகமுவ, மத்திய, வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்று (06) இரவு 11 மணி வரை இந்த வானிலை முன்னறிவிப்பானது அமுலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கம் ஏற்படும் போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Tags:
இலங்கை செய்தி