இன்று முதல் பாடசாலை விடுமுறை ஆரம்பம்
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (11) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விடுமுறை தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் ஒரு வாரத்திற்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி