தலதா கண்காட்சியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு மகிழ்ச்சி தகவல்
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் இன்று (18) முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறும் சிறப்பு தலதா மாளிகை கண்காட்சியில் கலந்துகொள்ளும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் சிறப்பு பயணச் செலவுகள் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை வழங்குமாறு பொலிஸாருக்கு பதில் ஐஜிபி அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கமைய, 10 நாட்களுக்கு மேல் தங்கள் பணியிடத்திலிருந்து பகல் மற்றும் இரவு நேரக் கடமைகளைச் செய்வதால் ஏற்படும் கூடுதல் செலவுகளைக் கருத்தில் கொண்டு, விசேட பணிகளில் உள்ள அதிகாரிகளுக்கு இந்த சிறப்பு கொடுப்பனவை வழங்க பொலிஸ் தலைமையகம் முடிவு செய்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி