கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான விசேட அறிவித்தல்


குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஒரு நாள் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான 24 மணி நேர சேவை ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் இடைநிறுத்தப்படும்.

இதனை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், மேற்கூறிய தினங்களில் ஒரு நாள் மற்றும் பொது சேவைகளை வழங்குவதற்கான டோக்கன் அட்டைகள் நண்பகல் 12 மணி வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.