இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாடு நோக்கி பயணமான இந்திய பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு சில நிமிடங்களுக்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறினார்.
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு ரயில் பாலத்தை இந்தியப் பிரதமர் திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்விற்காக அவர் தமிழகம் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடி, தனது ‘X’ கணக்கில், தனது விஜயத்தின் போது தனக்கு வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் அவர் மிகவும் நன்றியுள்ளவராக இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாச்சார, ஆன்மீக மற்றும் நாகரிக உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்றும், இது இருதரப்பு உறவுகளுக்கு நிச்சயமாக பலத்தை சேர்க்கும் என்றும் அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.