பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்
இன்று திங்கட்கிழமை (07) காலை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
நிதி மோசடி வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட டெய்சி பொரெஸ்ட் பாட்டி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று ஆஜராகியுள்ளார்.
Tags:
இலங்கை செய்தி