காஸாவில் குழந்தைகள் மற்றும் பெண்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்!


காஸாவில் குழந்தைகள் மற்றும் பெண்களைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் நேற்று (6)  நடத்தியுள்ள தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் பொழிந்த குண்டு மழையில் வீடுகள் சில தரைமட்டமாகியுள்ளன. இந்த தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் எனவும் 12 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.