உலக சந்தையில் உச்சத்தை தொட்ட தங்க விலை..!


இன்றைய தினம் (11) உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3200 அமெரிக்க ​டொலர்களை (900,000 ரூபாய்க்கு மேல்) தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைய, உலக சந்தையில் தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்தது இதுவே முதல் முறை என நம்பப்படுகிறது.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் போரின் விளைவாக தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

முதலீட்டாளர்கள் தங்க இருப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, பாதுகாப்பான சொத்துக்களுக்கு மாறுவதால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

இதற்கிடையில், உலக சந்தையில் தங்கத்தின் விலைக்கு ஏற்ப, நாட்டிலும் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் கொழும்பு தங்கச் சந்தை இன்று (11) அறிவித்த தங்க விலை விபரங்களின்படி, 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 235,500 ரூபாயாகும்.

மேலும், 24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 256,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.