சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவை


சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக எதிர்வரும் 11ஆம் திகதி முதல் சிறப்பு ரயில் சேவை செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவை இரண்டு கட்டங்களாக இயக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

முதலாவது கட்டத்தில், ஏப்ரல் 11, 12 மற்றும் 13ஆம் திகதிகளில் கொழும்பிலிருந்து பதுளை, அனுராதபுரம், காலி, கண்டி மற்றும் பெலியத்த ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

இரண்டாவது கட்டமாக, புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்து கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக ஏப்ரல் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் சிறப்பு ரயில் சேவை வழங்கப்படும்.