ஏப்ரல் 15ம் திகதி அரசு விடுமுறையா? - வெளியான தகவல்
ஏப்ரல் 15 ஆம் திகதியை அரசு விடுமுறை நாளாக அறிவிப்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என, அரசு நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேயரத்ன தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை புனித வெள்ளி நாளாக இருப்பதால், அந்த வாரத்தில் வேலை செய்ய மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால், அந்த நாள் குறித்து இன்னும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
Tags:
இலங்கை செய்தி