கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய தீவிரவாதம்! - அமைச்சரவை பேச்சாளர்


கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய தீவிரவாத குழுவொன்று செயல்படுவதற்கான தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ தெரிவித்துள்ளார்.

இந்த குழுவைச் சுற்றியுள்ள மேலதிக விபரங்களை பெறுவதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி இதுகுறித்து நாடாளுமன்றத்தில் சில முக்கிய தகவல்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அமைப்பின் செயல்பாடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு தரப்பினர் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் மாதம், கிழக்கில் அருகம்பை பிரதேசத்தில் உள்ள இஸ்ரேலிய சபத் தேவாலயத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு இன்னும் அதிகப்படுத்தப்பட்டிருந்தது.