இலங்கையின் முக்கிய பகுதிகளில் நாளை நீர்வெட்டு அமுல்!


நீர் கோபுரங்கள் மற்றும் விநியோக முறைமையின் பராமரிப்பு பணிகள் காரணமாக கட்டான நீர் விநியோக அமைப்பின் கட்டான வடக்கு பிராந்தியத்தில் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. 

அதன்படி, நாளை (19) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு கட்டான வடக்கு பிரதேசத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது. 

அந்தவகையில், பம்புகுளிய, முருதான, கட்டான வடக்கு, கட்டான மேற்கு, கட்டான கிழக்கு, உடங்காவ, மனச்சேரிய, தோப்புவ, களுவாரிப்புவ மேற்கு, இஹல கடவல, பஹல கடவல, வெலிஹேன வடக்கு, வெலிஹேன தெற்கு, அடிக்கண்டி, எட்கல, எட்கல தெற்கு, மஹ எட்கல மற்றும் களுவாரிப்புவ கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.