டெங்கு அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் சிகிச்சை பெறுங்கள் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு!


டெங்கு அறிகுறிகள் காணப்படுவோர் வீட்டிலேயே தங்காமல், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்களிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் டெங்கு கண்காணிப்பு, தடுப்பு மற்றும் மருத்துவ முகாமைத்துவத்துக்கான தரநிலை வழிகாட்டி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நடப்பாண்டில் இதுவரை நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 75,321 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரை 53 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர, டெங்கு அறிகுறிகள் தென்பட்டவுடன் தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் செல்வதே உயிரிழப்புகளைத் தவிர்க்கும் சிறந்த வழி என வலியுறுத்தியுள்ளார்.