அரச செலவுகளை முகாமைத்துவம் செய்ய சுற்றுநிரூபம்!
மத்திய கிழக்கு போர்ச் சூழலினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தணித்து, அத்தியாவசிய பொதுச் சேவைகளைப் பேணுவதை உறுதிப்படுத்துவதற்கும், தற்போதைய அரச நிதி மற்றும் அனுமதிக்கப்பட்ட அரச செலவு எல்லைகளுக்குள் செலவினங்களை முகாமைத்துவம் செய்வதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவினால் இந்தச் சுற்றறிக்கை அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், விசேட செலவின அலகுகள் மற்றும் ஆணைக்குழுக்களின் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள்/சட்டரீதியான சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
