நாட்டின் மக்கள்தொகையில் 33 சதவீதத்தினருக்குப் போதுமான சத்தான உணவு கிடைப்பதில்லை!
நாட்டின் மக்கள்தொகையில் 33 சதவீதத்தினருக்குப் போதுமான சத்தான உணவு கிடைப்பதில்லை என்று உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது.
அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 10 லட்சம் இளைஞர்கள் வேலை சந்தையில் நுழைவார்கள் என்றும்,
ஆனால் தற்போதைய பொருளாதார வளர்ச்சி விகிதத்தில், அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டில் 3 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்படும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த பத்து ஆண்டுகளில் கடுமையான வேலைவாய்ப்பு நெருக்கடி ஏற்படும் எனவும் தற்போது பத்தில் ஏழு இளைஞர்களுக்கு நல்ல வேலை இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் மின்சாரக் கட்டணம் ஆசியாவிலேயே மிக உயர்ந்த கட்டணம் என்றும் பொருளாதாரத்தின் மீட்சி பாராட்டுக்குரியதாகவும் நாட்டில் வறுமை 22.3 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது.
Tags:
இலங்கை செய்தி
