நிலக்கரி ஊழல் மற்றும் அவதூறு பரப்பல்களுக்கு சம்பிக்க பதிலடி!
ஐக்கிய குடியரசு முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று அதன் கட்சித் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நடைபெற்றது.
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலக்கரி கொள்வனவு ஊழல் மற்றும் அது தொடர்பான தற்போதைய நிலைவரங்கள் குறித்து அவர் விரிவான பகுப்பாய்வு ஒன்றை முன்வைத்தார்.
இந்த ஊழல் இடம்பெற்ற விதம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்திய அவர், இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினரால் திட்டமிட்ட ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சேறு பூசும் பிரசாரங்கள் மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளுக்கு இதன்போது தகுந்த ஆதாரங்களுடன் நேரடியாகப் பதிலளித்தார்.
அத்துடன், இந்த ஊழல் பொறிமுறையின் ஊடாக நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்டு மக்கள் திசைதிருப்பப்படுவது குறித்தும் அவர் தனது விசேட விளக்கத்தில் சுட்டிக்காட்டினார்.
Tags:
இலங்கை செய்தி
