தொடருந்து நிலைய அதிபர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்பான அறிவிப்பு

தொடருந்து நிலைய அதிபர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தொடருந்து நிலைய அதிபர்களுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பான நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு போக்குவரத்து மற்றும் ரயில்வே அதிகாரிகள் தீர்வு வழங்காவிட்டால், இந்த மாதம் 23ஆம் திகதிக்கு பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய ஆட்சேர்ப்பு நடைமுறையைச் சார்ந்த இடைக்கால திருத்தங்களுக்கான பரிந்துரைகளை பொது சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளதாகவும், அவற்றுடன் தொடர்புடைய அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் ஆணைக்குழுவின் செயலாளரால் நான்கு மாதங்களுக்கு முன்பே சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை அவை நடைமுறைப்படுத்தப்படாததால் தற்போதைய நெருக்கடி உருவாகியுள்ளதாக சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக ஜனாதிபதி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த மாதம் 9ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.