மீண்டும் முடங்கும் அரச வைத்தியசாலைகள் – தொடரும் வைத்தியர்கள் போராட்டம்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதனை, நேற்று (25) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.

சுகாதார அமைச்சரால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாததன் காரணமாக இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, முன்னதாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த தொழிற்சங்க நடவடிக்கை மீண்டும் தொடரப்படவுள்ளது.

இதற்கிடையில், குறித்த பணிப்புறக்கணிப்பின் ஒரு பகுதியாக, மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை வெளியில் உள்ள மருந்தகங்களில் (External Pharmacies) மருந்துகள் வாங்குமாறு பரிந்துரைப்பது, அத்துடன் தேவையான மருத்துவப் பரிசோதனைகளை தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துவது போன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகுவதற்கு மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.