சமூக ஊடக மோசடிகளைத் தடுப்பதற்காக புதிய விசேட வேலைத்திட்டம்!
இணையம் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண மோசடிகள் மற்றும் ஏமாற்று செயல்களைத் தடுப்பதற்காக, புதிய விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வுட்லர் இதனைத் தெரிவிக்கையில்,
இந்த விசேட வேலைத்திட்டம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நேரடி வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
இணைய வழியிலான குற்றங்களை கண்டறிந்து கட்டுப்படுத்துவதோடு, பொதுமக்கள் இவ்வகையான மோசடிகளில் சிக்காமல் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Tags:
இலங்கை செய்தி
