மீன்பிடிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!


அச்சுவெளி - தெற்கு கரத்தடி வாவியில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (22) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர் புத்தூர் - ஆவரங்கல், பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சடலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அச்சுவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.