இரு மாவட்டங்களுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தால் நிலை - 3 (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி,இந்த எச்சரிக்கை இன்று (26) காலை 8.00 மணி முதல் நாளை (27) இரவு 8.00 மணிவரை அமுலில் இருக்கும்.
கண்டி மாவட்டத்தின் உடதும்பர பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வலப்பனை, நில்தந்தஹின்ன, மதுரட்ட, ஹங்குரங்கெத்த மற்றும் நுவரெலியா மாவட்டத்தைச் சுற்றியுள்ள இடங்களுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
