மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை!


சீரற்ற வானிலை காரணமாக மறு அறிவித்தல் வரையில் மீனவர்கள் யாரும் கடற்றொழிலுக்குச் செல்வது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இந்த ஆபத்தான சூழலில் தற்போது கடற் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து மீன்பிடிப் படகுகளும் கரைக்குத் திரும்புமாறும் அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.