காதல் விவகாரம்; சிறுமி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!


கம்பளை - மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (14) இரவு கொலை செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கொலை செய்யப்பட்ட சிறுமி மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவம் காதல் விவகாரம் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வௌியிட்டுள்ளனர். 

சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்காக நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.