பால் போத்தல் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு!


2026 ஏப்ரல் 1ஆம் திகதி முதல், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் குழந்தைகளுக்கான பால் குடிக்கும் போத்தல்கள் அனைத்தும் இலங்கை தரநிலை (SLS) சான்றிதழைக் கொண்டிருப்பதை நுகர்வோர் விவகார ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.

அக்டோபர் 1, 2025 வெளியிடப்பட்ட வர்த்தமானியின் படி, 

உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் SLS தரநிலைகளைப் பூர்த்தி செய்யாவிட்டால் மற்றும் அதிகாரப்பூர்வ சான்றிதழ் அடையாளத்தைக் காட்டாவிட்டால், 

அத்தகைய போத்தல்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், கொண்டு செல்வது, சேமித்து வைப்பது அல்லது விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட உள்ளது.