மின்சார சபை பொறியாளர்களின் எச்சரிக்கை!
இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் தொழிற்சங்க சங்கமானது இன்று (06) முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு, மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் இன்று முதல் நிறுத்தப்படும் என செயற்குழு உறுப்பினர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மேலும் கடுமையாகும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து மீண்டும் ஒருமுறை மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் மின்சார பயனாளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி