இலங்கையில் எகிறும் பழங்களின் விலை!


பழங்களின் மொத்த விலை அதிகரித்துள்ளதாக பேலியகொடை பழ வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சுரங்க பிரிதிலால் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 

அதன்படி ஒரு கிலோ மாம்பழம் 400 - 500 ரூபாவுக்கும், அல்போன்சா மாம்பழம் 1000 ரூபாவுக்கும், திவுல் 280-300 ரூபாவுக்கும், பெல்லி 500-600 ரூபாவுக்கும், பப்பாளி பழம் 400ரூபாவுக்கும், கொய்யா 500-600 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விவசாயிகளுக்கான சாகுபடி மற்றும் போக்குவரத்து செலவு அதிகமாக இருப்பதால் பழங்களின் விலை அதிகரித்துள்ளது.

இதனால் அவற்றின் விற்பனை குறைந்துள்ளது என பழ வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த பழங்கள் நுகர்வோரை சென்றடையும் போது அவற்றின் விலை இன்னும் அதிகரிக்கிறது.

இதனால் பொதுமக்கள் பழங்களை வாங்குவது கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.