முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு பிணை!


பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இன்று திங்கட்கிழமை (25) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜரானதைத் தொடர்ந்து அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, டயனா கமகே 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

செல்லுபடியான விசாக்கள் இன்றி சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருத்தல் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் டயனா கமகேவுக்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 வழக்குகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்துள்ளார்.

இதனால் டயனா கமகேவுக்கு எதிராக நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜரானதைத் தொடர்ந்து அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.