இலங்கை மாணவர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயிலும் வாய்ப்பு!


இலங்கை கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் முதலாவது பட்டப்படிப்பைத் தொடரும் வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. இந்த புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்ட யோசனையில் ரூ.200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சர்வதேச தரப்படுத்தல் குறிகாட்டிகளில் முதல் 500 இடங்களை பிடித்துள்ள, ஆங்கில மொழியில் கற்பித்தல்களை மேற்கொள்கின்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் 04 ஆண்டுகள் பட்டப்படிப்புக்களை பூர்த்தி செய்வதற்கு புலமைப்பரிசில்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

முதலாம் கட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டுக்காக 20 தொடக்கம் 50 மாணவர்களை தெரிவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்படி கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.