கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகத்தின் அவசர வேண்டுகோள்!


கட்டாரில் உள்ள இலங்கை பிரஜைகள்  விழிப்புடன் இருக்குமாறும்  கட்டார் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆலோசனைகளை அவதானமாகப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கட்டாரில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நடந்து வரும் ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்பாக கட்டார் அதிகாரிகள் வெளியிட்ட பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் ஆலோசனைகளை கண்காணித்து செயல்படுமாறு  தூதரகம் இலங்கையர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.