5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை நிறுத்துவது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் விளக்கம்!
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை திட்டத்தை இரத்து செய்வது குறித்து அரசாங்கம் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் ரோஹிணி கவிரத்ன எம்.பி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரமதர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
“ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையை இரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை. இருப்பினும், புலமைப்பரிசில் மீதான அழுத்தத்தைக் குறைக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதுடன். 2028 அல்லது 2029 ஆம் ஆண்டுக்குள் அதைச் செயல்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags:
இலங்கை செய்தி