தகுதியானவர்கள் இன்று முதல் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும்!


க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று (9) முதல் மே மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நிகழ்நிலை முறையில் சமர்ப்பிக்கலாம்.

அதற்கமைய, https://www.ugc.ac.lk/ என்ற வலைத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.