மின்னல் தாக்கம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கும் கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மின்னல் எச்சரிக்கையானது இன்று (08) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என்று வளிமண்லவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி