புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்
புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக ஏ.கே.சுபாசினி இந்திக்கா குமாரி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய எச்.ஜே.எம்.சீ.ஏ. ஜயசுந்தரவின் சேவைக்காலம் 06 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
இதனையடுத்து குறித்த பதவிக்கு தற்போது இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சைகள் ஆணையாளர் பதவியில் கடமையாற்றுகின்ற இலங்கை கல்வி நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான ஏ.கே.சுபாசினி இந்திக்கா குமாரி லியனகே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைய இந்த நியமனத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Tags:
இலங்கை செய்தி