பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் வாய்ப்பு!
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். குறிப்பிட்ட சில இடங்களில் 50 மி.மீற்றருக்கும் அதிகமாக பலத்த மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மேற்கு மாகாணத்தின் கடலோரப் பகுதிகள், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் காலை வேளைகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும், மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய சேதங்களையும் குறைக்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதேபோல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
இலங்கை செய்தி