உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - வாக்களிப்புக்கான திகதியில் மாற்றம்!


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கான திகதிகள் மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் 24, 25, 28 மற்றும் 29 என அதற்கான திகதிகள் மாற்றப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.