நாட்டில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா பரவும் அபாயம்!


நாட்டின் சில பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா, டெங்குவை பரப்பும் நுளம்புகள் மூலமாகவும் சிக்கன்குன்யா பரவுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

பலர் விடுமுறையில் சென்றுள்ளதால், தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்யாது, நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தம் செய்யும் திறன் இன்மையினாலே இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சுற்றுப்புறத்தை தொடர்ந்து சுத்தம் செய்வதன் மூலம் நுளம்புகளின் பெருக்கத்தைத் தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.