பண்டிகையை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு!


சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளை திறந்த வெளியில் பார்வையிட அவர்களது உறவினர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இதற்கான சிறப்பு வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தினங்களில் கைதிகளின் உறவினர்கள் அவர்களுக்கு தேவையான  உணவுப்பொதிகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய ஒரு பொதியை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பார்வையாளர்கள் மற்றும் கைதிகளின் பாதுகாப்புக் கருதி அனைத்து சுகாதார வழிகாட்டல்களும் கடைப்பிடிக்கப்படும் என சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.