திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்ட இளம் குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு

 


திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

பாரதிபுரம், விசுவமடு பகுதியைச் சேர்ந்த நாச்சியப்பன் பிரபு (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மதுவுக்கு அடிமையான இவருக்கு கடந்த 07ஆம் திகதி திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அதே நாளில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பின்னர் 09ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.