நானுஓயாவில் நாயை சித்திரவதை செய்த நபருக்கு விளக்கமறியல்!
நானுஓயாவில் நாய் ஒன்றை கொடூரமாக தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை நானுஓயா பொலிஸார் கைது செய்து, இன்று (29) நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
நீதவான், அவரை வரும் செப்டம்பர் 10ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் வளர்க்கப்பட்ட நாயை தடியில் துரத்தி தாக்கி, நடுவீதியில் இழுத்துச் சென்று, பின்னர் ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பாக நானுஓயா பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், நேற்று (28) அவர் கைது செய்யப்பட்டு நானுஓயா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர், நானுஓயா எடின்பரோ தோட்டத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை செய்தி