பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!
பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அண்மைய எரிபொருள் விலை உயர்வு, குறிப்பாக டீசல் விலை உயர்வு, பேருந்துக் கட்டணத் திருத்த சூத்திரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.
இது தற்போதைய பேருந்துக் கட்டணங்களுடன் ஒப்பிடும்போது 10%-க்கும் அதிகமான உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.
திருத்தப்பட்ட பேருந்துக் கட்டண நடைமுறையை செயல்படுத்துவதற்கான ஒப்புதலைக் கோரி அமைச்சரவை அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைமை பணிப்பாளர் கலாநிதி நிலன் மிராண்டா குறிப்பிட்டார்.
அதன்படி, இந்த முன்மொழிவு ஒப்புதலுக்காக இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், கட்டணத் திருத்தம் நேற்று (22) அமுல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று பல பேருந்து சங்கங்கள் முன்னதாகக் கூறியிருந்தன.
கட்டண உயர்வு அங்கீகரிக்கப்படும் வரை பேருந்துப் பணிகளைத் தொடர்வது சாத்தியமில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்னவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
