கலா ஓயாவின் வான்கதவுகள் திறப்பு - அருகில் வசிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


கலா ஓயாவின் இரண்டு வான்கதவுகளும் இன்று  09 மணியளவில் நான்கு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன. 

நீர்மட்டம் அதிகரித்தமையே இதற்குக் காரணம் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதனால் கலா ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.