இலங்கை சினிமாவின் ராணி மாலினி பொன்சேகா காலமானார்!


சிங்கள திரையுலகின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகா இன்றைய தினம் சனிக்கிழமை (24) அதிகாலை காலமானார்.

மாலினி பொன்சேகா உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

மாலினி பொன்சேகா உயிரிழக்கும் போது அவருக்கு 76 வயதாகும்.

கடந்த 1968 ஆம் ஆண்டு  ‘புஞ்சி பபா’ என்ற திரைப்படத்துடன் இலங்கைத் திரைப்படத்துறையில் தனது வாழ்க்கையை நடிகை மாலினி பொன்சேகா தொடங்கினார்.

1978 ஆம் ஆண்டு பைலட் பிரேம்நாத் தமிழ்த் திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து கதாநாயகியாக நடித்தார்.

அத்துடன், யார் அவள் (1976), மல்லிகை மோகினி (1979), பனி மலர் (1981) ஆகிய தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு மாலினி பொன்சேகா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக  நியமிக்கப்பட்டார்.

சுமார் 70 வருடங்களுக்கு மேலாக நாட்டின் கலை மற்றும் சினிமாவில் மிகவும் மதிக்கப்படும், செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக காணப்பட்ட மாலினி பொன்சேகா, “இலங்கை சினிமாவின் ராணி” என அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.