ஒரே தாயின் 9 குழந்தைகளை கொன்று குவித்த இஸ்ரேல்!
காசாவில் (Gaza) இஸ்ரேலிய (Israel) ஏவுகணைத் தாக்குதலில் அந்நாட்டு மருத்துவரின் ஒன்பது குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த மருத்துவரின் பத்துக் குழந்தைகளில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, வெள்ளிக்கிழமை நடந்த இந்தத் தாக்குதலில், அவரது உயிருடன் இருக்கும் மகன் பலத்த காயமடைந்துள்ளதுடன், அவரது கணவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
இஸ்ரேலிய தாக்குதலின் போது மருத்துவர் பணியில் இருந்த நிலையில் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
மேலும், உயிரிழந்த குழந்தைகளில் மூத்த குழந்தையின் வயது 12 மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
உலகம்