பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி - சுற்றறிக்கை இரத்து!


பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி வழங்கி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவின் கையொப்பத்துடன் தொடர்புடைய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, 2023 ஜூன் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை கடந்த 9ஆம் திகதி முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக, பேருந்துகளின் அலங்காரம் மற்றும் உதிரிப்பாகங்களை நிறுவுதல் தொடர்பான சட்ட விதிகளுக்கு அனுமதி வழங்கி தொடர்புடைய சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இந்த புதிய சுற்றறிக்கையில் இவை தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.