விபத்தில் பலியான பச்சிளம் குழந்தை!
நிட்டம்புவ – ருவன்வெல்ல வீதியின் கோனகல பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் 3 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (21) பகல் இடம்பெற்ற இந்த விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி கவிழ்ந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தின்போது வாகனத்தின் பின்புற இருக்கையில் பயணித்த பெண்ணும், அவரது குழந்தையும் பலத்த காயங்களுடன் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி 3 மாதமேயான பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தை கோனகல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
